Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை
தணற்காலம்
சித்தாந்தன்

Night நகரத்திலிருந்து எடுத்துச்செல்வதற்கு
என்ன இருக்கிறது

வருஸாந்திரங்களின் மாயவிழிகளிடை
புரளும் வர்ணங்களின்
அந்தகார ஒலியில்
மூச்சுத்திணறகிடக்கின்ற சூரியனின்
ஓளியலைகளை
விழுங்கித்தொலைத்திருக்கிறது நகரம்

இந்த நகரத்திலிருந்து
எதை எடுத்துச்செல்லமுடியும்

இலைக்கணுக்களில் தெறித்த
மரங்களின் கனவுகளையும்
காற்றில் அவிழ்ந்து அலைகிற
பறவைகளின் குரல்களையும்
வழிதவறிச்சென்ற மேய்ப்பர்கள்
அள்ளிப்போய்விட்டனர்
தெருக்களெங்கும்
அவர்களின் வீரச்சொற்களும்
இசைமுறிந்த பாடல்களும் ஏராளம்

இந்த நாற்றச்சகதியிடை
எப்படி வாழ முடியும் அமைதியாய்

நகரத்தில் வாழுகிற
ஒவ்வொரு மனிதனின் தலையின் மேலும்
சுருக்குக் கயிறுகள் தொங்குகின்றன
தூக்கம்
துர்க்கனவுகள் மிக்கது
சில்வண்டின் ஒலியில் கூட
வன்மம் எரிவதான
சலனம் நிரம்பிய இரவுகள்

நகரத்தை தூங்க வைப்பதற்கு
மௌனப்பாட்டுக்களை இசைப்பவர்களே
மனிதர்களின் தூக்கத்தையும்
இரவுகளில் களவாடிச் செல்கின்றனர்

நகரம்
ரகசியத்தீயில் மிதக்கிறது
பூக்களைச் சாபமிட்டு
தீ வளர்க்கும் மகாயாகத்தை
தீ வைத்திருப்போர் செய்கிறார்கள்
ரகசியத் தீயில்
வீடுகளுக்குள் புழுக்கமெடுக்கிறது
வெம்மை வியர்வை
மனங்களுக்குள் வழிகிறது

தீயின் பல முகங்களிலிருந்தும்
பாழடைந்த ஒரு நகரத்தின்
தடயங்களை வரைகிறார்கள்
தீ வளர்ப்போர்

அவர்களிடம் அழிவிலிருந்து பெருகும்
இசைச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் கொடியவை
குழந்தைகளின் பூக்களை பறித்துவிட்டு
எரியும் கனவுகளை வளர்த்துச் செல்லும்
சொற்கள்
தணற்காலச் சொற்கள்

சிலுவைகளால் நிரம்பிய நகரம்
தனது
பூர்வீககாலப் பெருமையின் பாடலை
அவலக்குரலில் பாடிக்கொண்டிருக்கிறது
நகரத்தின் மனிதர்களுக்கு
பாடல் கேட்பதேயில்லை
தீ பற்றிய ரகஸியம்
அவர்களின் காதுகளை அடைத்துவிட்டிருக்கிறது

மனிதர்கள் மனிதர்கள்
காலத்தை உறங்க வைத்துக்கொண்டு
விழிகள் முட்டிய பயங்களோடு
இரவுகளை கனவுகளால்
தூங்கும் மனிதர்கள்
தூங்கும் மனிதர்கள்

காலப்பெருவெளியில்
நிழல்களில் தீப்பிடித்து அவலமாகிப்போகிற
மனிதர்களை
யார் மன்னிக்க முடியும்

அவர்கள் புலம்பினார்கள்
தங்கள் கனவாயிருந்த பறவையின் நிழலில்
தீயின் நிழல்கள் உறுத்தக்கிடப்பதாகவும்
பறவைக்கனவை
அகாலத்தீ அள்ளி வைத்திருப்பதை
தங்கள் சந்ததியால் தாங்கமுடியுமா என்றும்

நான் நகரத்து மனிதர்களின்
பறவைக்கனவை
எடுத்துச் செல்கிறேன்

மகா காலத்தின்
அற்ப மனிதர்களிடமிருந்தும்
நாற்றமெடுக்கும் நகரத்திலிருந்தும்
அதை எடுத்துச் செல்கிறேன்

- சித்தாந்தன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com