 |
கட்டுரை
அம்மாச்சி நா.செந்தில்
குருதிப்பெருவழியே வந்த என்னின்
பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த
முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை
விட இனிது.
என் சிரிப்பில், முறைப்பில், களிப்பில் உன்னவனை
தேடிக்கண்டபின் காதலனாக்குவாய் - குறும்பில்
அழுகையில், பிடிவாதத்தில் உன் பிள்ளை கண்டு
மகிழ்வாய்,தூங்கும் வசத்தில் ,இடதுகை பழக்கத்தில்
உந்தை கண்டு சேயாவாய்.
முகம்பார்க்கும் ஆவலுக்கு ரசம் போன கண்ணாடி
தடையில்லை என நீ என்னுள் உன் உறவுகளை - தேடித்
தேடி கண்டெடுத்தாய். உன் காதலானாய்
தந்தையாய், மகனாய் உன் முந்தானை பிடித்தலைந்த
இந்தப் பேரனை விட்டு ஏன் கிழவி? செத்துப்போனாய்..........
- நா.செந்தில் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|