 |
கட்டுரை
காத்திருப்பேன் காலமெல்லாம் செங்காளி
மாரியம்மன் திருவிழா
மஞ்சள்நீர் விளையாட்டு
சொம்பிலே நீரெடுத்து
சுந்தரிநீ சிரித்தபடி
மாமன்மேல் ஊத்திடவே
மானைப்போல் வந்தாய்
தூரத்திலென்னைப் பார்த்து,
துரத்திநீ ஓடிவர
வழியில் தடுக்கி விழப்போக
உன்னைத் தாங்கிப் பிடித்தேன்
கையிலே இருந்தசொம்பு
கவிழ்ந்து கொட்டி
மஞ்சள்நீர் இருவரின்
மேனியை நனைத்தபொழுது
அணைப்பளித்த இன்பத்தில்
மெய்மறந்து இருவருமே
மயங்கி நின்றோமே
மீண்டும் அத்தகைய
பொழுதுக்காக காத்திருப்பேன் எப்போதும்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|