 |
கவிதை
முன்வைக்கப்படும் கேள்விகளை...
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
எதிர்ப்படும் கேள்விகளுக்கான நம்
எதிர்வினைகள் என்னென்ன?
மற்றொரு கேள்வியை
மறுமொழியாய் தருவது.
கேள்விகளின் தரம் பற்றிய
கேள்விகளை முன்வைப்பது.
கிண்டல்கள் கேலிகள் என்று
கேள்விகளையே கேள்விக்கு உள்ளாக்குவது.
மௌனமான முகங்களால் கேள்விகளை
முற்றிலும் நிராகரிக்க முயல்வது.
வேறுவழியின்றி வெளிப்படும் நம்
விடைகளிலும் விளங்கத் தெரிவது
முன்வைக்கப்படும் கேள்விகளைப் பலரும்
முழுதாய் வாங்கிக்கொள்ளாததும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|