 |
கவிதை
பிறப்பு...
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
அந்த
மகப்பேறு மருத்துவமனையில்
மாதாந்திரப் பரிசோதனைக்காக
மனைவியோடு போய்வருகையில்
பார்த்த முகங்களில்
ஒன்று
இன்று எதிர்ப்பட்டது லிப்டில்
கணவன் சகிதமாய்
கைகளில் ஏந்திய சிசுவோடு.
சுகப்பிரசவம் நேற்று என்று
யாரிடிடமோ
சொல்லிக்கொண்டிருந்தவனின்
தோள்களைப் பற்றியபடி
இருந்தவளின் முகத்தில்
சுமையொன்று இறங்கிய
சோர்வும் களைப்பும்.
பேச்சின் தொடர்ச்சியாய்
வந்து விழுந்தது
ஏழு வருடங்களுக்குப் பின்
பிறந்த முதல் பிள்ளை என்பது.
அதுவரை வாட்டமுட்டிருந்த
அவளின் முகமும் கண்களும்
அங்கிருந்த அனைவருக்கும்
பொதுவாய்
வெளிப்படுத்திய ஒரு மலர்ச்சி.
இந்த கவிதை பிறந்து
புறப்பட்டது அந்த ஒரு
மலர்ச்சிப் பிரகாசத்தில்தான்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|