 |
கவிதை
தருணங்கள்..
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
முன் எப்போதோ நான்
முன்வைத்த யோசனையாம்.
முற்றிலும் நினைவிலில்லை.
வாங்கிய இடமொன்று நல்ல
விலை இப்போதென்று
கண்களில் ஒளிகொண்டு
கைகளைப் பிடித்தபடி
கடைத்தெருவில் ஒரு நண்பன்.
மகனுக்கு வாங்கிவந்த
மாநிற உடைகுறித்து
மற்றெப்போதும் போலன்றி
மனம்குளிர்ந்த வாழ்த்துக்கள்
மனைவியிடம் வீட்டில்.
இயல்பாய் நிகழும்
இதுபோன்ற தருணங்களில்
இளைப்பாறி களைப்பாறும்
இல்வாழ்வின் நிகழ்கணங்கள்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|