 |
கவிதை
எட்டமுடியாத உயரங்கள்
கண்டணூர் சசிகுமார்
கருத்தமேகத்தில் அசையும்
கணக்கற்ற ஓவியமும்
காலையிலும் மாலையிலும்
கண்கூசாக் கதிரழகும்
கால்தூக்கி நடைபயிலும்
தன்குழந்தை நாட்டியமும்
கற்புநெறி தவறாத
தன்மனைவி பேரழகும்
கண்ணிழந்த
மனிதனின் கண்ணுக்கு
எட்ட....
கனத்த மழையின் இசையும்
வலுத்த மின்னலின் ஓசையும்
தென்றலின் இசையும்
அலையின். ஓசையும்
மழலை இசையும்
யாழும் குழலும்
எழுப்பும் ஓசையும்
செவியிழந்த மனிதனுக்கு
செந்தமிழின் ஓசையும்
எட்ட...
பசிக்கும் குழந்தையின்
ஜனனத்தில் மரணித்த
தாயின் மார்பும்
எட்டமுடியாத உயரங்களே.
- கண்டணூர் சசிகுமார் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|