 |
கவிதை
அலைபாயும் சுமைதாங்கி த.சரீஷ்
தினம் தினம்
ஒரு பாடலேனும்
பாடநினைத்து...
இயலாமல்போன
என் கனவுகள் கால்முளைத்து
எங்கேயோ வேகமாக
ஓடிக்கொண்டிருக்கிறது...!
மெல்ல மெல்ல
உணர்வின் வழிவந்த
எதையோ ஒன்றை
எழுதத்துடித்து தோற்றுப்போன
என் எழுதுகோல்
கண்களை அகலத்திறந்து
எதையோ...
வெறித்தனமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறது...!
மீண்டும் மீண்டும்
நீந்திவரும் நினைவுகள்
என்னுள்ளே....
உரச உரச உண்டாகும்
இதமான சுமையை
சுமக்கமுடியாதுபோன
என் மனசு
தனக்குள்ளேயே...
பேய்த்தனமாய்
பேசிக்கொண்டிருக்கிறது...!
மனச்சிறைக் கம்பிகளை
உடைத்து
சுவடுகள் தேடி ஓடிய
என் சுவாசக்காற்று
ஏனோ தெரியவில்லை
திரும்பிவந்து...
இதயக்குகைக்குள்
செத்துக்கிடக்கிறது...!
இருப்பினும்...
இந்த இருட்டில்
யாரங்கே.....
என் மனவானத்து
பலகோடி நிலவுகளுக்கு
ஒவ்வொன்றாக ஒளிகொடுப்பது...?
அது....
ஒரு நாள்
ஒரு இராகம்
ஒரு கவிதை...!
மறுபடி மறுபடி
அலைபாயும்
உயிருள்ள உணர்வாக
அவள்.... நான்...!!!
- த.சரீஷ், பாரீஸ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|