 |
கட்டுரை
நாளை உன் வருகைக்காக... த.சரீஷ்
நீளும் இரவுகளின்
ஒவ்வொரு
வினாடியின் முடிவிலும்
உன் பெயர் ஒலிக்கும்
காணும் கனவுகளின்
ஒவ்வொரு
காட்சியின் நடுவிலும்
உன் முகம் தெறிக்கும்
விரையும் காலங்களின்
ஒவ்வொரு
பொழுதின் இடையிலும்
உன் நினைவுகள் தொடரும்
தொலைவாகிப்போனபின்பு
நீளும் பிரிவுகளாய்
இன்னும் நீ...!
மறுபடி மறுபடி
உயிர்த்தெழுந்து...
இன்றும்...
நான் என் காதலுடன்
நாளை
உன் வருகைக்காக....
- த.சரீஷ், பாரீஸ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|