 |
கட்டுரை
எனது கனவில் சிரித்தவர்கள் சாரங்கா தயாநந்தன்
காலமுள் கிழித்த
காயத்திலிருந்து வடிகிற
குருதியை வழித்து
கோபத்துடன்
மேகங்களில் வீசியெறிகிறது
செவ்வந்திச் சூரியன்.
சாலையோரத்து உதிர்சருகு
தன்னை மிதித்த கால்களை
முறிப்பதாய்ப் பேசியபடியே
முறிகிறது துகள்களாய்.
'தெரியாதே மிதித்தேன்'
எனச் சத்தியமிட முடியாத ஒரு
நேர இடைவெளிக்குள்
என்னை
கொட்டி விட்டுச் சுருள்கிறது
சிறு எறும்பு.
இவ்வாறாக இவைகள்
வாழ்ந்துவருகிற உலகில்
வாழ்ந்து வருகின்ற நான்
சகோதரனுக்கோ
துணைவருக்கோ
கொடுப்பினையில்லாதபடிக்கு
வீதிக்கிறங்கிய பொழுதொன்றில்
என்னுடலில் இச்சையுற்ற
ஒற்றை வார்த்தையை
உமிழ்ந்தாய் என்மீது
காறித் துப்பிய உமிழ்நீராய்.
அந்த எச்சில்
பிறகாதுகள் ஏதாவதொன்றில்
விழுந்திருக்குமோவென
அலைகிற என் கண்களை
மேலும் தாழ்த்தி நடந்தேன்
உடல் நடுங்கிப் பதற.
என் அதிஷ்ட வேளை.
எவரும் கேட்டிருக்கவில்லை.
எவரும் கேலிக்கவில்லை.
எனினும்.....
இரவானது அமைதியுற்றதன் பிறகு
என் கனவில் வந்து
என்னைப் பார்த்துச் சிரித்தன
செவ்வந்திச் சூரியனும்
ஒரு சருகும்
சின்னதோர் எறும்பும்.
தாங்க முடியவில்லை.
- சாரங்கா தயாநந்தன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|