 |
கட்டுரை
கவிதை இரா.சங்கர்
மனக் கோட்டையின்
எண்ணக் கதவுகள்
உடைக்கப்படுவதால் ஏற்படும்
போர்!
போர்க்களம் ஒன்றுதான்...
போர்கள்தான் பல்லாயிரம்!
போர்க்களத்தில் சிந்திய
உயிர்மலர்களை சேர்த்து
செய்திட்ட மாலை!
வெற்றியின் தோள்களிலும்
தோல்வியின் கால்களிலும்!
அனைத்துமே கவிதைகள்தான்...!
கவிதைகளுக்கு கண்களில்லை...
ஆனாலும் பார்வையுண்டு!
கவிஞனின் கண்களில்
கவிதைகளின் பார்வை!
கவிதைகள் வடிக்கும்
கண்ணீரின் சுவையில்
எண்ணற்ற சுகங்கள்...
அதை
வடித்தவன் உணர்வுகளை
படித்தவன் உணர்ந்துவிட்டால்
கவிதைக்கு வெற்றி!
இனி போர்க்களம்
ஆயத்தமாகலாம்
அடுத்த போருக்கு!
- இரா.சங்கர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|