 |
கவிதை
காத்திருப்பின் அசெளகரியங்கள் சகாரா
எங்கேயாகிலும் ஏதாவதொன்றை
எதிர்நோக்கியிருக்கையில்
சகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது
எதிர் இருக்கை தொணதொணப்புகளை..
கசகசத்து வழியும் வியர்வையை..
உரக்கப் பேசும் அலைபேச்சாளர்களை..
விஷமப் பார்வைகளை..
இப்படி ஏதாவதொன்றை
எது எப்படியிருப்பினும்,
காத்திருப்பின் முடிவில்
கிடைக்கப் பெறும் பதில்கள்
திருப்திகரமானவையாக இருக்கப் போவதில்லை
எப்போதும்.
- சகாரா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|