 |
கவிதை
வாடா மல்லி நான் ரிஷி சேது
வாசமில்லாத ஒரே காரணத்திற்காக
சூடாமலே விட்டுப்போன வாடா மல்லி நான்
சாவி கொடுக்க ஆளின்றி ஓடாது நின்றுபோன
ஆனால் பழுதுபடாத கடிகாரம் நான்
உப்பாய் போன காரணத்திற்காக யாரும்
குடிக்காமல் விட்டுப்போன அலைகடல் நீர் நான்
வரதட்சணை கொடுக்கமுடியாமல்
திருமண சந்தையில் சீண்டாது விட்டுப்போன
முதிர்கன்னி நான்
கண்டுபிடிக்க ஏதுமில்லாததால்
கண்டுகொள்ளாமல் விட்டுப்போன
விஞ்ஞானி நான்
மொத்ததில் நானொரு மன நோயாளி...
- ரிஷி சேது ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|