 |
கட்டுரை
பூ ரிஷி சேது
கோவிலூர் திருவிழாவில்
கூவி கூவி
விற்றது போக..
வழி நெடுக கத்தி
கழிந்த முழம் போக
மிச்சமிருக்கும் பூவையெல்லாம்
என்னசெய்ய?
தலையில வச்சுகலாமுன்னா
அவரு போயி மாசமிரண்டுகூட
ஆகலையே...
மிச்சமிருக்கும் பூவையெல்லாம்
என்ன செய்ய??
அவரு படத்தில் மாட்டி வச்சேன்
அழுகை வந்தது
அவருக்காகவா?
பூவுக்காகவா?....
- ரிஷி சேது ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|