 |
கவிதை
என்னவளே! ராஜகுமாரன்
நினைவே நின்றுவிடு
இல்லை எனை தின்றுவிடு
கனவே கலைந்துவிடு-இல்லை
நினைவை கலைத்துவிடு,
சந்தன நிறத்தவளை
சாம்பிராணி மணத்தவளை
வாழை குருத்தவளை
காணமுடியாத வாழ்க்கை.
நான் இன்னும் முழுக்கப்
படிக்காத இலக்கிய புத்தகம்
அவள் அள்ள குறையாத
அழகிய அட்சய பாத்திரம்
ஆண்மையைகட்டி இங்கு
நானும்-பெண்மையைகட்டி
அங்கு அவளும், நாங்கள்
நடத்தும் காதல் ராஜ்ஜியம்
கணக்குப் பார்த்தால்
எல்லாம் பூஜ்ஜியம்,
சிறிது கண்மூடினால்
சிரிக்கின்ற உனது முகம்
சிறிதளவும் குறையாமல்
நிலவுபோல அதுவரும்
வானத்து வெண்ணிலவே
இலக்கியத்து பெண்ணிலவே
உன் நினைவு தாக்குதடி
நிலைகுலைய வைக்குதடி.
வண்ணத்து பைங்கிளியே
என் எண்ணத்து பைந்தமிழே!
நிலவும் தேள்போல ஆனதடி,
என் நிழலும் உன்போல தோனுதடி
வெறுமையாய் என்காதல்சோலை
வெளி நாட்டில்தான் எனது வேலை
இப்படியே கழியுமோ வாழ்க்கை!
இது நித்தமும் வேதனை வேட்கை
- ராஜகுமாரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|