 |
கட்டுரை
என் மலர் ராஜ்
திருப்பங்கள் மோதிய காயங்களில்
அடைமழைக்கால உற்சாகத்துடன்
பெருக்கெடுக்கும் வலி நதியில்
அமிழ்ந்தமிழ்ந்து மிதந்துசெல்லும்
என் மலரைத் தொடர்ந்தோடும்
ரணமான பாதங்கள்.
காலைக்கதிரின் சுத்தசிவப்பில்
காதலும் நேயமும்
அதுபோன்ற பிறவும்
அழகொளிவீசும் இதழ்களாகி
மணக்கும் உன்னதப்பூவின்
காலப்பேரிழுப்பின் வழியில்
எதிர்படும் பாலங்களில்
உள்நுழையும் கணம்தோறும்
நுளையும் என் நெஞ்சம்
கீறல்களை உத்தேசிக்காமல்
பூவின் போக்கை தடுக்கும்
பன்னாடை முள்ளடைசல் விலக்க
நீர்ச்சுழிப்பின் பயம்தாங்கி
இறங்கி. எடுத்துவிட்டு...
முடிவுற்ற நதியில் போய்கொண்டிருக்கும்
என் மலரை
இன்றுவரை
தொடர்ந்துகொண்டுருக்கிறேன் நான்.
- ராஜ், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|