 |
கவிதை
பிழைக்கத் தெரிந்த கவிதை! இராகவன்
உன் அழகுக்கு மொழிவடிவம்
தர முயன்று, முடிந்த வரை
வரைந்து முடித்தேன் ஒருசில
வார்த்தைகளின் துணை கொண்டு!
ஒரு குவளைத் தண்ணீரில் உருக்குலையும்
மாக்கோலத்தைப் போலில்லாமல்
உன் பார்வைக் கடலில் சொட்டிய
பெருமித அலைகளை உள்ளுறிஞ்சித்
தன்னைக் கெட்டிப்படுத்திக் கொண்டது
என் கெட்டிக்காரக் கவிதை!
- இராகவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|