 |
கட்டுரை
போய் வாவென்றேன் புத்தொளி
உன்னை காதலிக்கிறேன் என்றான்
எதனால் என்றேன்
உன் கண்கள், அதன் கருணை
உன் இதழ்கள், அதன் இனிமை
உன் மூக்கு, அதன் முழுமை
உன் கூந்தல், அதன் குளுமை
உன் சிரிப்பு, அதன் சிறப்பு
உன் விரல்கள், அதன் செயல்கள்
உன் நடை, அதன் நளினம்
உன் இடை, அதன் வளைவு
உன் நெஞ்சம், அதன் நிறைவு
அத்தனையும் பிடிக்குமென்றான்
அவனை வழியனுப்பிவைத்தேன்...
‘என்னை’ மட்டும் பிடிக்கும் போது
வா எனக்கூறி.
- புத்தொளி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|