 |
கட்டுரை
சுடுகாடு ப்ரியன்
பகலிலும் அலறும் ஆந்தை
கள்ளிச் செடி
காய்ந்த சருகு - அதில்
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
மண்ணெண்ணெய் வாசத்துடன்
குபுகுபுவென எரியும் சவத்தீ!
சுழன்று அடிக்கும் காற்றில்
கனன்று பறக்கும் சாம்பல்
கால் இடறும் எலும்புகள்,
அடையாளங்களோடு
பிணம் காத்து
உக்காந்து இருக்கு சுடுகாடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!
- ப்ரியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|