 |
கவிதை
காதல் மறதி பூங்காற்று தனசேகர்
உன்னிடம் பேச வந்ததையெல்லாம்
நான் மறந்து விட
என்னிடம் பேச வந்ததையெல்லாம்
நீ மறந்து விட
அப்படி மறந்து போனதைச்
சொல்லவும்
நாம் சந்தித்த நொடியில்
மறந்து போக
இத்தனை நாட்களாக
இத்தனை மணி நேரங்களாக
அப்படி என்னதான் பேசினோம்
நினைவிருக்கிறதா உனக்கு
மறந்து
விட்டது
எனக்கு.
- பூங்காற்று தனசேகர்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|