 |
கட்டுரை
முதல் காதல் கவிதை பூங்காற்று தனசேகர்
கடுவன் குரங்கொன்று
மூன்றாவது மரத்திலிருக்கும்
தம் காதல் மந்தியை
நெருங்க –
அடுத்தடுத்த மரத்திற்குத்
தாவிய வேளையில்
குலுங்கிய
மரக்கிளைகளிலிருந்து
உதிர்ந்திருக்குமோ
முதல்
காதல் கவிதை?
நீ
கண்களுக்கு
மை தீட்டும்
பென்சிலைக் கூர்தீட்டி
ஒரு கவிதை எழுதினேன்.
உன்
ஓரப்பார்வை
போலிருந்தது
அக்கவிதை
- பூங்காற்று தனசேகர்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|