 |
கட்டுரை
அவைகளோடு நானும்... பச்சியப்பன்

உன் வீட்டு எதிரில் நின்றுகொண்டு
உனைப் பற்றி
வெளிச்சமாய் பாடிக்கொண்டிருக்கும்
அந்தத் தெருவிளக்கைப் போல
நீர் ஊற்றிய பாசத்தில்
மை தொட்டு
உன் பெயரைப்
பூக்களாய் எழுதிப்பார்க்கும்
உன் தோட்டத்துச் செடிகளைப்போல-
கண்ணில் படும்போதெல்லாம்
தன் குரலை
நீ வளர்க்கும் உயிரில் தேய்த்து - உனை
மெல்லக் கூப்பிடும்
அந்த இளங்கன்றைப் போல -
உனைப் பார்த்த பரவசத்தில்
கைநீட்டிச் சிணுங்கி ஓடிவரும்
உன் அக்காளின் குழந்தையைப் போல
நானும் அழைக்க உறவு வேண்டும்;
மனசு தருவாயா?
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|