 |
கட்டுரை
அகதி பச்சியப்பன்
மூணு நாள்
சாராயக் கடை பக்கம் போவாத
சுப்பனைப் பிடித்து
மூஞ்சியில் சாராயம் ஊத்தினானாம்
கடைக்காரன்
வெம்பிப்போன குப்பத்தா
கடைக்காரனை
வாய்க்கு வந்தபடி பேசிப்பிட்டாளாம்
...முண்ட
பல்லுமேல நாக்குப் போட்டு பேசுறதான்னு
சேலையை உருவிட்டானாம்
மேஜாதிக்காரன்
அம்மணமா அழுத குப்பத்தாவுக்காக
சேரியே தெரண்டுடுச்சு
ரத்தக்களறி ரணகளறி
இரும்புத் தொப்பி வந்தப்புறம்தா அடங்குச்சு
இருந்தாலுமென்ன
இப்போ சேரிதாண்ட வழியில்லை
கூலிசெய்ய நிலமில்ல
எப்படிச் சொல்றது சாமி
எங்க ஊரு ஐயம்பாளையம்னு
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|