 |
கட்டுரை
பழம் பச்சியப்பன்
விடியலின் சாம்பல் இருட்டு
ஏரிக்கரைப் பனையைத் தேடி
எங்களின் பயணம்
கருந்தோல் பிளந்து மஞ்சள் காட்டி
காற்றில் வாசமாய்ப் பேசும்
புதரில் விழுந்த பழங்கள்
வெயிலில் களைத்து
ஈச்சையின் கீழொதுங்கினால்
நாலுபழம் உதிர்த்து
பாசம் காட்டும்
கரம்பில் மாடுகள்
நாவலின் உச்சியில்
அணில்களாய் ஊர்வோம்
தவறிய பழங்கள்
கிணறு ‘சப்’புக் கொட்டி ருசிக்கும்
மீன்கள் குவிந்து
மறுபடி கலையும்
பள்ளி விட்டு வருகையில்
சடைத்துக் கிடக்கும் களாப்பழங்கள்
சோமசுந்தர வாத்தியின்
பிரம்படிக்கு மருந்து
கோடை விடுமுறை
ஒவ்வொரு கையிலும் தொரட்டு
கொடுக்காப்புளி யாவும்
முள்முடியேந்திய வள்ளல்
தோப்புக்குப் போனால் இளுப்பை
சாமியர் மலையெனில் இலந்தை
பெரியார் ரோடு முழுக்க புளி
ஏதுமற்றதொரு பொழுதில் அவிஞ்சிப் பழமென
அலைந்து திரிந்ததொரு காலம்
மரமேறிப் பழம்தேடிய வாழ்வு
பூண்டறுந்து போக
மாடியேறிப் பணம்பொறுக்கவென்று
சபிக்கப்பட்டாயிற்று.
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|