 |
கட்டுரை
ஒளி பச்சியப்பன்
ஒவ்வொரு பொழுதும்
ஏமாற்றத்தில் சாய்கிறது
கல்லறையில்
இடறுகின்றன கால்கள்
கனவுத் தளிர்களின் மேல்
எதார்த்தத்தின்
அமிலத் தெறிப்புகள்
ஈன்ற பெண் நாயாய்
தன் குட்டியையே தின்னுகிறது
எதிர்பார்ப்பு
தட்டி எழுப்பினாலும்
புரண்டு படுக்கிறது
வாழ்க்கை
இருந்தும்-
துருப்பிடித்த டிரங்க் பெட்டியின்
அடிவாரத்தில்
உன் புகைப்படத்தின் வடிவில்
மங்காமல் சிரிக்கிறது
நம்பிக்கை.
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|