 |
கட்டுரை
ஜெ.நம்பிராஜனின் இரண்டு கவிதைகள்
1.முயற்சி
சிணுங்குகிறது
கை கால்களை ஆட்டுகிறது
பிறகு அழுகிறது
எதுவும் நடவாத போது
தொட்டிலில் இருந்து
தானே இறங்குகிறது
குழந்தை
2.கண்ணாமூச்சி
முழுவதும் மறையாமல்
கொஞ்சம் தெரியும்படி
ஒளிய வேண்டியிருக்கிறது
குழந்தைகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்.
- ஜெ.நம்பிராஜன்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|