 |
கவிதை
உயிர்மெய் ஒருமை ந.நாகராஜன்
பொய்யான உயிரே
மண்ணில் தெரியும்
மெய்
மெய்யான உடம்பே
விண்ணில் மறையும்
உயிர்
உயிரின் தெரிதல் மெய்
மெய்யின் மறைதல் உயிர்
உயிர் பேயாய்த் திரியாமல்
மெய் பிணமாய்ச் சரியாமல்
தெரிவதை மறைத்தால்
மரணமிலாப் பெருவாழ்வு
உயிரென்றும் மெய்யென்றும்
பொருள் இரண்டில்லை
உயிரெனும் மறைப்பொருளே
உடம்பெனும் மெய்ப்பொருளாய்த்
தெரியும்
உடம்பெனும் மெய்ப்பொருளே
உயிரெனும் மறைப்பொருளாய்
மறையும்
பொருள் ஒன்றே
பெயர் இரண்டு
தெரிந்தால் அதன் பெயர் மெய்
மறைந்தால் அதன் பெயர் உயிர்
இருபொருட் பிரமையால்
மரணம்
ஒருபொருட் பிரக்ஞையால்
மரணமிலாப் பெருவாழ்வு
உயிரும் மெய்யும் ஒன்றே அறிக
பேய்ப் பிண பிரமைகள் அறவே ஒழிக
உயிர்ச் சிவமே
மெய்ச் சக்தி
மெய்ச் சக்தியே
உயிர்ச் சிவம்
உயிரின் தரமே
மெய்யெனும் திடமாய்
திடத்தில் தரக்குறைவு
மனப் பிரமை
மனப் பிரமையால் தோன்றும்
நோய் தேய்வு மூப்பு மரணம்
சிவசக்தியெனும் உயிர்மெய் ஒன்றே அறிக
நவசித்தியெலாம் செயச் செய்யும் உபாயம் அதுவே
- ந.நாகராஜன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|