 |
கட்டுரை
ஓடுகாலிகள் முத்துக்குமரன்
பீடங்களின் பிடறிகளில்
விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.
எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்.
- முத்துக்குமரன், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|