 |
கட்டுரை
ஆண்டிட அறியேனே! அ.முத்தன்
அரியணை அமர்த்தியவ ளிதயத்தி லிருந்தே
ஆட்சிசெய் யென்று அன்புக் கோளெனக்கு
ஏவித்தான் எழுப்பினாள் எழுந்து மோதிக்
கரைகளைத் தாக்கும் காதல் அலைகளை!
ஆணவம் நீங்கி யாங்கு ஆழ்வேனெனும்
அதிகாரச் சிரசின்றி அவ்விதயத்தே அமர்ந்- தவள்
ஆசைக் கனவோடவள் வேட்கைகட்கிசைய
எதை, எப்படி, எப்போது செய்வதென வறியாதே
விழித்தவ் வலைகளின் திக்கற்ற போக்கில்
மிதக்கிறேன், மூழ்கிறேன், மிதக்கிறேன்
மீண்டும் மீண்டும் பேதை நானென் நாட்டுக்
கோனா யங்கு என்றுமே இருந்திட!
- அ.முத்தன், நியூயார்க் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|