 |
கவிதை
போய்வா மழையே.. மதன்
ஓய்ந்துவிட்ட
மழை மாலையால்
ஈரம் சொட்டிக்கொண்டிருக்கும்
பின்மழை நேரங்கள்.
ஜன்னல் கம்பியில்
மழைப் பிள்ளைகளின்
வரிசைத் தற்கொலைகள்.
கழுவப்பட்ட
ஊரின் அமைதி
மிகப் புதியதாய்.
வெள்ளையான வானம்
வண்ணங்களின் நிலையின்மையைப்
பறையிட்டபடி.
இல்லாத மஞ்சள்
என்னை மட்டும் உறுத்தும்.
மழை உதிர்த்துவிட்ட
இலைகளுக்கு,
செத்துப் போய்விட்ட மழையின்
மிச்சப் பெருந்துளிகளையே
கண்ணீராக்கிப் பழி வாங்கும்
மரங்கள்.
மழையின் மரண அஞ்சலிக்கு
திடீரென முளைக்கும்
குடை மனிதர்கள்.
உடலை உறுத்தா இதக்குளிரில்
சாலைக்குழி
மழை எச்சத்தில்
கால் வைத்து விடாமல்
அவள் கைப்பிடித்து,
நின்றுவிட்ட
மழையில் நனைந்தபடி
நான்.
- மதன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|