 |
கவிதை
ஹைக்கூ மாறன்
துணி உலர்த்தப் போனால்
கொடிக் கயிற்றில்
எறும்பு வரிசை
.
ஜாதிச் சண்டையில் உயிர்விட்ட
அப்பாவின் புகைப்படத்தில்
கதம்பம்
.
தொடருமா மழை
ஒரே குடைக்குள்
நானும் அவளும்
.
பசியோடு மாடு
அதன் வண்டியில்
வைக்கோல் திருடும் குருவி
.
ரயில் கடந்த தண்டவாளத்தில்
உயிரோடு சிரிக்கிறது
புளியஞ்செடி
.
கழுதைக்குத் தெரியுமா
கருணை
சாப்பிடுகிறது
காணாமல் போனவன்
போஸ்டர்
.
மனிதர்களைத் தின்று
செழித்து வளர்ந்திருக்கிறது
இடுகாட்டுப் புல்வெளி
.
விதவைகளுக்கு
மணியார்டர் வர
காத்திருக்கிறார்கள்
தபால்கார்கள்
.
தேக்கு மரம் விற்பனை
ஆணியடித்து விளம்பரம்
வேப்ப மரத்தில்
.
வாகனங்களின் இரைச்சலில்
சிதைந்துபோனது
பயண வழியில்
உதித்த கவிதை
.
மகள் விளையாட
வாங்கி வந்தேன்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|