 |
கட்டுரை
மீண்டும் மாறன்
கையேந்துபவர்கள்
அலைக்கழிக்கப்பட்ட
துயரத்தின் வெம்மைதான்
இந்த முடிவு நோக்கி
உன்னை நகர்த்தியிருக்கக் கூடும்
சிவப்பு ஒளிரக் காத்திருந்து
ஓடுகிறாய் வாழ்வில்
பயணிக்க வக்கற்ற
வாகனங்களின் பின்னே
பிஞ்சு ரேகை தேயுமளவு
அழுந்தத் துடைக்கிறாய்
எப்போதும் போகாத
கறையுடைய முதலாளிகளின்
வண்டிகளை
உழைப்புக்குக் கூலி கேட்டு
ஒடுங்கி நிற்குமுன்னை
உயிரோடு விடுவதே பெரிதென்று
பறக்கிறார்கள்
பத்தில் ஒருவரிடம்
மனிதம் மலரும் சித்தம் குறித்து
மகிழ்வதற்குள்ளாகவே
நிகழ்ந்துவிடுகிறது
தரைக்குச் சில்லறை வீசி
மீண்டும் உன்னை
அவர்கள் பிச்சைக்காரனாக்குவது
விலக நினைத்தாலும்
உன்னைத் திரும்ப அடைக்கும்
வாழ்வின் கொடூர சிறை குறித்து
வேறென்ன சொல்ல
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|