 |
கட்டுரை
முரண் மாறன்
ஆரோக்கிய குழந்தை
பிறக்க வேண்டி
அவன் ஆப்பிள் வாங்கிய
அதே கடையில்தான்
வறுமைக்குப் பயந்து
அவள் கர்ப்பம் கலைக்க
நான் பப்பாளி வாங்கினேன்.
************
‘என்னைக் கட்டிக்கிறியா?
என்றால்
காணாமல் போய்விடுகிறார்கள்
கல்யாணத்துக்காக
கையேந்தும்
கன்னிப் பெண்கள்.
*************
நாலுவேளை தின்று
நாற்பது முறை முயங்கி
நல்ல ஆரோக்கியத்துடன்
நடை பயின்றாலும்
‘ஏங் கண்ணு
எளச்சிப் போய்ட்ட’
என்பதாகத்தான்
குரலெழுப்புகிறார்கள்
ஆத்தாக்கள்
தனிக்குடித்தனம் போன
மகன்களைச்
சந்திக்கையில்.
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|