 |
கட்டுரை
ஹைக்கூ மாறன்
மழைத்துளி விழுந்த
மண்ணில் எழுந்த
வாசம் நுகர்வதற்குள்
சிக்னல் விழுந்துவிட்டது
.
எந்தப் பேருந்திலும்
ஊனமுற்றவர்கள்
உட்கார்ந்து பார்த்ததில்லை
ஊனமுற்றோர்
இருக்கையில்
.
தண்ணீர் லாரி விபத்து
மக்கள் ஓடோடினர்
குடங்களுடன்
.
கரகாட்டம் முடிந்து
தூங்கப் போனோம்
ஆடியவளைத் தவிர
.
வீடு வந்தும் நினைவில்லை
வழியில் சந்தித்த
நண்பனின் பெயர்
.
சாவு வீட்டில்
நடனமாடியது
ஊதுவத்திப் புகை
.
நெரிசல் பேருந்தில்
திணறாமல் உலவும்
மல்லிகை வாசம்
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|