 |
கட்டுரை
விலகியவளுக்கு... மாறன்
இப்பொழுதும்
என் பெயரை
‘மாரன்’ என்றுதான்
எழுதியிருக்கிறாய்
உனது கடிதங்களில்
காணப்படுவது போலவே
ஒற்றெழுத்துக்களின்றி
விகாரமாகத் தென்படுகிறது
வீட்டு விலாசமும்
எப்போதுமென் கேலிக்காளாகி
ஒருக்களித்த கதவென
சாய்ந்து கையெழுத்து
இன்னும் நிமிரவில்லை
லேசாக அழிய முற்பட்டிருக்கும்
எழுத்துக்கள் சுமந்திருப்பது
உனது கண்ணீராக
இருக்கக் கூடாதாவென
ஆவலுறுகிறேன்
உறை மீதான முகவரியை
படித்துவிடும் மனதிற்கு
உள்ளிருக்கும்
உன் அழைப்பிதழ் வாசிக்க
தெம்பையும்
சேர்த்தனுப்பியருக்கலாம் நீ.
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|