 |
கட்டுரை
அடி மாறன்
திரும்ப திரும்ப
அடித்துக் கொள்கிறான்
வலி சகித்து
படையலுக்குமுன்
திருடித் தின்றதற்காய்
அப்பாவின் சாட்டை பேசியது
நினைவில்
கன்றி நிற்கும் தேகம்
இரத்தக் கசிவோடு
புரையோடிப்போன
புண்களில்
அடிகளின் சரித்திரம்
விரட்டும் பாதங்கள்
தெய்வத் திருவடியென
தொழுகிறான்
மீண்டும் மீண்டும்
இத்தனைக்கும் பிறகும்
கை விரிப்பவர் மீதான
கோபத்தை
தன் மீதே காட்டுகிறான்
மற்றுமொருமுறை
சவுக்கை வீசி
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|