 |
கட்டுரை
இரண்டாவது சந்திப்பு மாறன்
நாம் அருகருகே
சந்தித்துக் கொள்வது
இது இரண்டாவது முறை
முன்பு பேருந்துக்கும்
இப்போது மழைக்கும்
ஒதுங்கியுள்ளோம்
வேறு பெண்களும்
வானம் வெளுக்கக்
காத்திருந்தாலும்
எனதன்பின் வசீகரம் குவிவது
உனை நோக்கி மட்டுமே
குளிருக்கு அடக்கமாகவும்
குறுகுறுத்த பார்வை
தவிர்க்கவும்
இழுத்துப் போர்த்துகிறாய் சேலையை
முகத்திலேந்தும்
சாரலை விடவும்
ரசனைமிக்கதாய் இருக்கிறது
உன் கையுதறலில்
தெறித்த நீர்த்துளி
மெல்ல மொட்டவிழ்ந்த
என் கட்டுப்பாடுகள்
மையமாக வைத்துச்
சுற்ற ஆரம்பித்தன உன்னை
நேசிக்கலாமென
நினைத்தபோதுதான்
நிகழ்ந்தது
யாரோ ஒருவன்
வாகனமெடுத்து வந்ததும்
உரசியபடி நீ
உட்கார்ந்து போனதும்
அதன்பின்
மழை விட்டிருந்தது தூவானம்தான் விடவில்லை.
- மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|