 |
கட்டுரை
தாங்கிக்கொள் நட்பே அ.மல்லி.
தாங்கிக்கொள் நட்பே- எனைத்
தாங்கிக்கொள்!
நீ இட்ட திலகம் தந்தப் பேரழகின்
பெருமிதத்தில் உலாவரும் பேதை
எந்நிமிடமும் இடறக்கூடும்!
தாங்கத் தயாராகு!
தாங்கிக் கொள் நட்பே-எனைத்
தாங்கிக் கொள்!
தரமானக் கவிதை தரக்காரணமானப்
பெண்மையையெண்ணிப் பெருஞ்செருக்கில்
நடைபயிலும் நழுவும் நேரம்!
தாங்கத் தயாராகு!
தாங்கிக்கொள்! நட்பே! எனைத்
தாங்கிக் கொள்!
- அ.மல்லி. ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|