 |
கட்டுரை
குறுனைகள் மதியழகன் சுப்பையா
1)
வேகமாய்
வேர்பிடிக்கிறது
ஓரிலைத் தாவரம்
இலைகள் குவித்து
கிளைகள் பரப்ப.
2)
பசுமை இலைகள்
சிறு- பெறு கிளைகள்
வண்ண, நறுமண
மலர்கள்
பழுத்த, சுவைமிக்க
கனிகள்
முடங்கிக் கிடக்கிறது
வீசி பிடித்து
விளையாடுவதை நிறுத்து
விதைத்துப்பார்
விந்தை புரிவாய்
அல்லேல்
விட்டெறி
தானே முளைத்து
வாழும்
3)
இலையுதிர்த்து
மெலிகிறது
மரம்
ஈரம் தேடி
அலைகிறது
வேர்கள்
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|