 |
கட்டுரை
வாழ்க்கை மதியழகன் சுப்பையா
வந்து கொண்டும்
போய்க் கொண்டும்
இருக்கிறது பறவைகள்
எலிகளுக்கும்
கரையான்களுக்கும்
தெரிவதேயில்லை
புத்தகத்தின் மதிப்பு
பெய்தும் கெடுக்கிறது
பெய்யாமல் கெடுக்கிறது
பெருமழை! பெருமழை!
நிற்காமல் ஓடுகிறது
மின் தொடர் வண்டிகள்
நின்றபடி போகிறார்கள்
நிற்கதியற்றவர்கள்
பள்ளிக்குப் போகிறார்கள்
மாணாக்கர்கள்
பணிக்குப் போகிறது
சிறார்கள்! மழலைகள்
பெத்துப் போடுகிறாள்
பெரிய அன்னை
பிச்சை எடுக்கிறான்
எங்கப்பன்.
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|