 |
கட்டுரை
பெத்த மனசு கோவி. லெனின்
தான் பெத்த
நாலு பையன்களுக்கும்
சர்க்கார் உத்தியோகம்
யார் கேட்டாலும்
பெருமையாகச் சொல்லும்
செல்லம்மாளுக்கு
ஒரு பையனும்
ஊத்தவில்லை
ஒரு வேளை கஞ்சி.
பசியோடு வந்தவளைப்
பார்த்து
“ஒரு வாய் சாப்புட்டு
போம்மா” என்கிறாள்
பப்பாளி விதைக்கும்
கள்ளிப்பாலுக்கும் தப்பிய
அவளது பெண் பிள்ளை.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|