 |
கவிதை
பொருளில்லாருக்கு...: லட்சுமிகாந்தன்
எல்லாவற்றையும்
மறந்து விடு.
கடைசித்துளி ரத்தமும்
வடிந்த சவமாகு.
நினைவுகளின்
மென்பரப்பை
தீயிட்டுப்பொசுக்கு.
உறவுகளில்
உன்னதமென்று எதுவுமில்லை.
கணங்களில் நிகழ்கிற
ஸ்பரிசத்திற்காக
காலமாய் சுமக்காதே வேதனையை...
கருணை, அன்பு, தாய்மை
யாவற்றுக்கும் பின்னால்
புன்னகைக்கிறது
பணமென்னும் குரூரம்.
- லட்சுமிகாந்தன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|