 |
கவிதை
நான் உடைபடும் போது... அ. லட்சுமிகாந்தன்
முள்ளாய்
இமைகளுக்குள்
உறுத்துகிறாய்
இருளும்
ஒளியும்
மங்கித்தெரிய ...
தொட்டிக்குள்
சுருளும் வேராய்
உனக்குள்
என்னைச் சுருக்காதே ...
நீரின்றி
மலரும் செடிபோல
மனதெனது
உனக்கு அழகாகவோ
பிறருக்கு நிழலாகவோ
வாழமுடியாமற் போகலாம்
நான் உடைபடும் போது.
- அ. லட்சுமிகாந்தன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|