 |
கவிதை
மௌனம் சார்ந்த நிலங்களில் இலக்குமணராசா
என் கவிதைக்குள்
வர மறுக்கின்றன
உன் மௌனத்தோடு
வைத்திழந்த
என் வார்த்தைகள்
ஒரு தோல்வியின் தாளாமையோடு
அன்றைய மழையை
உன் வரவை
இன்றைய வெயிலை
நிரப்பிபோகிறது காலம்
ஒரு பாதசுவடுக்குள்!
அந்த சுவடின் ஓரத்தில்
நிலையாய்
நிற்கும் ஒரு பார்வையில்
கொடிய வெயில் ஒன்று
மழையாய் உருகும்
அபத்தம் நிகழ்கிறது!
முகம் மூடி சுயம்
மறைக்கும் உன் விரல்களினூடே
வழியும் கண்ணீர் துளிகளை
கவிதை என அடிக்கோடிடும்
உன் முயற்ச்சிகளில்
சிறு சாட்டைக்கு பயந்து
கோயில் வாசல் யானையொத்து
தன் சுயம் மறந்து
எல்லைக்குள்
நிற்கிறது
மொனமாய் ஓர் அன்பு..
அன்பை எதிர் நோக்கும்
கேள்விகளுக்கு
தேர்வின் அக்கறையோடு நீ
தரும் வெறுமை நிரம்பிய பதில்கள்
எனக்குள் நினைவுபடுத்துகிறது
சில கவிதைகளையும்
இயலாமைகளையும்...
இதை கவிதையென்றும்
நான் கவிஞன் என்றும் நீ
கூறி செல்லலாம்..
காலம் எதைதான்
நிகழ்த்தவில்லை..
- இலக்குமணராசா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|