 |
கட்டுரை
எங்கோ... குட்டி ரேவதி
படுக்கையறையில் குழந்தைகள் மைதானத்தில்
நீல ஆகாயத்தில்
புல்வெளியில் திறக்கிறது ஒரு போர்க்களம்
எங்கோ மலையைக் கீறிக்கொண்டு வழியும்
அருவிக்குத் தலைகுனிகிறது கனத்த கானகம்
எங்கோ பூப்போன்றதொரு சிறுமியின் உறுப்பு
நகங்களால் கிள்ளியெடுக்கப்படுகிறது
எங்கோ எனது தோழி புதியதொரு வீட்டில்
எரிந்துகொண்டிருக்கிறாள்
குவிஆடியில் பீறிடும் ஒளியின் வீச்சு என
எங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது
எமது தோழர்களின் ரத்தம்
எங்கோ தம் குழந்தைகட்கு முலையிட்டுப்
பிட்டாக்கிப் பரிமாறுகிறாள் ஒரு தாய்
எங்கோ மழையின் இடிக்குரல் படிந்து
மக்கிக்கொண்டிருக்கலாம் ஒரு கிராமம்
இங்கே நிதம் ஒரு மனவெளியில்
சிறகுகள் உதிர்க்கிறது எனது பருவஉடல்
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|