 |
கட்டுரை
பறவைகள் சுழலும் மயானவேளை குட்டி ரேவதி
காற்றினுள் சிறு கீற்றெனப்
பறந்து சென்றது மாலைவேளை
வார்த்தைகள் இறுகிக்கிடந்தன
வீழ்ந்த எரிநட்சத்திரம் குளிர்ந்ததைப்போல்
உணர்வுகள் பேதலித்துத் தவித்தன
பாத்திரத்திற்குள் தவறி விழுந்த பல்லியினும்
அதிகமாய்
பிரபஞ்சத்தின் இறுதிமலரைப் போன்ற
பாவனையுடன் உதிர்ந்தது
அம்மலர்
இப்படியாக நெருங்கும் இரவின்
அசைவைப் பார்க்கையில்
காலம் ஒரு சிறகெனக் கனக்கிறது
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|