 |
கட்டுரை
மதயானை குட்டி ரேவதி
ஒரு மதயானையின் நிழல்
என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது
விளக்குகளுக்கிடையே அகப்பட்ட ஸ்படிகமாய்ச்
குழப்பமடைந்திருந்த நாளில்
தீயசகுனங்களால் சப்தித்தது
தனது வாலைச் சுழற்ற
அதிர்ந்த நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மெளனம் வேய்ந்த உச்சிவேளைகளில்
பாறைகளை அலறச் செய்தது
விடாய் தீர்க்கப் போகையில்
நதியையே பருகித்
தன்மாமிசம் குலுங்கக் கொக்கரித்தது
தாமரைகள் பூத்த குளத்தையும்
கனவுகள் பூக்கும் இரவினையும்
வண்ணமிழக்கச் செய்தது
இன்று காலைதான் அம்மதயானை
என்னுள்ளே புகுந்தது
நிழல் கரைந்தது
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|