 |
கவிதை
உபாதை குட்டி ரேவதி
மழைக்கால முடிவின் விபரீதம் அது.
மழையின் நீளக்கரங்களில்
தன்னுடல் சரித்தது பெருமரம்
வேர்கள் வெளிச்சம் கண்டதும்
கூசின; மரண பீதியில் உலர்ந்துவிட்டன.
மெளனமாய் இருவர் வந்து
ரம்பத்தால் அறுக்கத் தொடங்கினர்;
ஒருவன்
தந்தையின் மரணப்படுக்கையில் அருகிலிருந்ததை
நினைத்தவாறே...
மற்றவன்
கூடலுக்குப் பின் முகம் கோணி அழுத
மனைவியை நினைத்து வெட்கித்தவாறே...
பிணத்தை மொய்க்கும் பறவைகளின் பேரோலம் படர
மரம் இரண்டாய்ப் பிளந்தது
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|