 |
கட்டுரை
நினைவின் மேடு குட்டி ரேவதி

அலைகள் சரியும் கடலில் அவள்
உடல் நிமிர்த்தி நடந்தாளாம்
வண்டியில் சிக்கி நாயினுடல் கிழிந்து விழ
மண்ணைப் பூசி உயிர் தந்தாளாம்
நூறு நூறு ஆண்டுகளின் வாசனையை
ஒரு தாமரையைப்போல் சுமந்தாளாம்
நீர் சுரக்கும் கண்களால்
நடுநிசியெல்லாம் பாடினாளாம்
வாதை பீடித்த உடல்களை
மருந்தின் ஆற்றில் முக்கி எடுத்தாளாம்
மழையில் மழையில் நனைந்தவாறு
கடலையே இமைக்காமல் நோக்கியிருந்தாளாம்
‘உடம்பெல்லாம் மயிர், ஆம்பிளை மாதிரி
இங்குதான் அவள் கண் மூடினாள்’ எனப்
பூக்கள் விழித்த புதரைக் காட்டினர்
அழுதுவிட்டேன் நான்
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|