 |
கவிதை
ஏதுமற்ற வானம் குட்டி செல்வன்
இந்நாட்களில்
எப்பொழுதும் எதையாவது
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
வாகனங்களற்று நீளும்
சாலையின் தனிமையுடன்
கசப்பான நினைவுகள்
நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை
அவைகளை
ஒவ்வொறுமுறை கிளரும்போதும்
மீண்டுமொறுமுறை என்னில்
வலிகளை ஏற்படுத்த தவறுவதில்லை
காகிதமாக்கி கசக்கி எறியவோ
முற்றிலும் அழித்துவிடவோ முயலும்
என் முயற்சிகள் அனைத்தும்
தோல்வியையே தழுவுகின்றன
ஒருபோதும்
உன் வெளிச்சங்களால்
நெருங்க முடியாத என் இரவுகளோடு
இன்றும் கூட நிகழலாம்
ஏதேனுமொரு கசப்பான நிகழ்வு
என்னாலும் தடுத்துநிறுத்த இயலாதபடி
- குட்டி செல்வன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|